
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டிகளில் தேர்வாகிய கராத்தே வீராங்கனைகளுக்கு பாராட்டு
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட 27 பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்..
கோவை மாவட்ட கராத்தே சங்கம் சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்ற போட்டியில் 1,000க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இதில் கோவையில் இருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள்,5 தங்கம்,5 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 27 பதக்கங்கள் வென்று
முதலிடம் பிடித்து பெற்ற மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்..
இந்நிலையில் மாநில அளவில் தேர்வாகி உள்ள வீரர் வீராங்கனைகளுக்கு தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து,,
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் மற்றும் , பயிற்சியாளர்கள், சிவமுருகன்,அரவிந்த்,தேவதர்ஷினி,சரவணன்,விமல்,சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்…